பூமகளே நீயின்று
குளிர்ந்தாய் – ஆனாலும்
நீமட்டும்
குளிர்ந்தால் போதுமா?
ஏனிப்படி கேட்கிறேன் தெரியுமா? உன் கருணையின்றி
எப்போதோ குளம் வற்றி
பருகத் தண்ணீரின்றி தவித்தேன்.
இப்போது
உன்னில் நனைந்து மகிழ்கிறேன் – இது என்
தப்பாத
அங்கப் பிரதட்சனம் என்பேன்.
இன்னும்
பொழிவாய் இது போதாது தாயே .
நாவரட்சி நீங்க
பருகும் நன்ணீர் ஊற்றெடுக்குமா உன்னில்?
No comments:
Post a Comment