புத்தாண்டு பிறக்குமெனில் புதுமைகள்
மலருமென்பார் – இதுவெறும்
* * *
நாட்டில் நிலவும் லஞ்ச லாவண்யத்திற்கு எதிராக மாணவியரிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வாகையில் (01.01.2014)-ல் படைக்கப்பட்டது.
தத்துவமல்ல தரணிவாழ் மாந்தர்கண்ட அனுபவம்
தானிது.
நித்தமொரு சோதணை நீங்காத வேதனைதான்
என்பார் – அப்பப்பா
மெத்தப் படித்தவனும் மேணிவாட
உழைப்பவனும் நோகின்றார்.
இன்றிருப்பவை நாளையில்லை நாளை நடப்பவை
யாரறிவார் - மெய்யில்
அன்றாடம் நடக்கும் நிகழ்வின் பின்னணியும்
புரியவில்லை.
நின்றாலும் வம்பு நடந்தாலும் வம்பென
நொந்ததுதான் மிஞ்சும் – போதும் சென்றுவருகிறே னென்றாலும் விடமாட்டார் இதை யாரிடம்
சொல்ல?
நல்லதே நினைப்போம் நல்லதே
செய்வோமென சொன்னாலும் - அந்த
பொல்லாத நேரமும்
போதாத காலமும் மெல்லநம் வழியில் குறுக்கிடும்.
தொல்லைகள் நம்மை
துரத்திடும் திரும்பிப் பார்த்தாலும் மிரட்டிடும் – பின் கொல்லைவழி வந்து நம்மைக்
கைகோர்த்து கெடுத்து மகிழும் உண்மை.
நாடெங்கிலும் ஊழல்;
நல்லவர் யாரென புரியவில்லை – எங்கெங்கும்
தேடினும் நாட்டிலொரு நல்லவரைக்
காண்பது அரிதிலும் அரிது.
ஓடியொளிந்து புகார்
கொடுத்தால் அங்கும் ஊழலே தளிர்க்கும் - துணிந்து
சாடினால் துயரம்தான்
மிஞ்சும் தூக்கமும் கெடும் யாரிடம் சொல்வேன்?
நூறு ஆயிரமென லஞ்சமெனில்
பணியிடைநீக்கம், சிறைச்சாலை- ஆனால்
கூறுபோட கைநோகும் கோடிகள் பெற்றால் சிறையடைப்பு ஒரு நாடகம்.
ஆறேழு மாதங்கள்
சென்றால் எக்காளம் பேசுகின்றார் - மீண்டும்
வீறுநடை
போடுகின்றார்; தெருவில் வக்காளத்து தேடுகின்றார்.
இதுதான் காந்திமகான்
தந்த பாரதத் தாயின் அவலம் – இனியொரு புதுமையைப் படைக்கத் துடிக்கும் இளம்
நெஞ்சங்களே எழுமின்.
இதுதான்
தருணம் இரண்டாயிரத்துப் பதினான்கின் தொடக்கம் – இன்னல் எதுவானாலும் லஞ்ச லாவண்யத்தைக்
கிள்ளி எறிவோம் வாரீர்.* * *
நாட்டில் நிலவும் லஞ்ச லாவண்யத்திற்கு எதிராக மாணவியரிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வாகையில் (01.01.2014)-ல் படைக்கப்பட்டது.
No comments:
Post a Comment