Saturday, September 3, 2016

கணவனை இழந்து தவிக்கும் கற்புக்கரசிக்கு ஆறுதலாய் ஒரு கவி




சுந்தரனைத் தேடி தனியாய்
இந்திர சபை நாடிப் பறந்து
மந்திர மொழி பேசி மயக்கிடுமோர்
தந்திர வலை வீசி தர்க்கம் செய்ய
வந்துள்ள சத்தியவான் சாவித்திரியே!
பிரிந்து சென்றவன் சென்றவன்தான் - ஆனாலும்
திரும்பி வருவான் இனியொருநாள்.
அது இப்பிறவி அல்ல; பின்னொரு பிறவியில்
பிரிந்த உன்னைத் தானே தேடி வருவான்.
அதுவரை பொறு மனமே
அருகில் உருண்டு வரும் அந்நாளும்.
நீ தேம்பி அழும் ஓசை கேட்டு
எங்கோ உனைத் தேடி அலைகிறான் – உன்
தங்கக் கொலுசொலி கேட்டொருநாள் மீண்டு வருவான்.  

No comments:

Post a Comment