25.9.2016-கவி
அரங்கம்
தமிழ்த்தாய் வாழ்த்து
காலை எழுந்தவுடன் படிப்பு இது பாரதி கண்ட கனவு
மாலை முழுதும் விளையாட்டு இதுவும் கவிஞன் ஆசை.
மாலை தொடுத்து வரவேற்க விழைந்தேன் காணேன் அவனை
சோலை தென்றலாய் தவழும் தமிழ் அன்னையே வாழியநீ!
அவை அடக்கம்
அரங்கம் அதிர அடுக்குச் சொற்கள் கூட்டி கவிதொடுத்து
பரங்கித் தலையான் போற்றும் ஆங்கிலச் சொல் தடுத்து
கரங்கள் உயர்த்தி கத்திமுனைச் சொற்களால் புத்தி புகட்டும்
குரங்குப் பிடியாய் கவியரங்கம் நடத்தும் தென்னவரே வணங்கிடுவேன்.
** ஆயிரம்தான் உச்சரிப்பு மாறினும் தமிழுள்
அயலெழுத்து வந்துபுகல் என்ன நீதி?**
தமிழுக்கு அமுதென்று பேரென்றால்
அந்த தமிழேநம் உயிரென்போம்
அமிழ்தத்தில் பொங்கிவரும் தேனெனில் அந்த
தேன்கூடும் நாம்தானே.
குமிழுக்குள் ஒளிரும்மின் இழையெனில் அந்த இழைக்குள்ளும் நாமே
நிமிடத்தில் எழுகின்ற கவியெனில் அக்கவிதைக்கு நாம் கருவென்போம்.
இன்றிங்கு
ஒன்றுசொல்ல ஓடிவந்தேன் ஒருகனம் சிந்தித்துப் பாருங்கள்
ஒன்றல்ல இரண்டல்ல ஓராயிரம் உச்சரிப்பு தமிழில்
உண்டு.
தொன்று தொட்டு வளர்ந்த தமிழ் தொல்காப்பியன் கண்டதமிழ்
சென்றவிட
மெல்லாம் செருபகை வென்று வெற்றிவாகை சூடும்தமிழ்.
ஆயிரம்
உச்சரிப்பு மாறினும் தமிழில் தடுமாற்றம் இல்லை
பாயிரம் தந்தாலும் பங்கெடுக்க பிறமொழிபுக இடமில்லை
இங்கு.
தாயிடம் மடிதவழ எமக்கு மட்டுமே இடமுண்டு யாரேதும்
ஆயிரம்தான் சொன்னாலும் தமிழில் அயலெழுத்து
வந்துபுகல் என்னநீதி?
அயல்மொழி ஆதிக்கம் கண்டு ஆத்திரம் கொள்ள
வேண்டாம்
கயல்விழி பார்வையால் நம்தமிழை நாளும்
காத்திடுவோம்.
வயல்வெளி
தென்றலில் தமிழ்க் கவிதைகள் பல படைப்போம்
இயலிசை
நாடகமென எதிலும் திகழும் தமிழுக்கு இணையில்லை.
பிறமொழி சொல்லும் ஒலியும்
நம்மை அழித்திட அனுமதியோம்
அறவழி நம்வழி அவ்வழி என்றும்
தமிழைக் காக்கும்.
திறவாத கதவையும் திறமிகு
கவிதையால் திறக்கச் செய்வோம்
இறவாத வரம்பெற்று என்றென்றும்
சிறக்கக் காண்போம் தமிழை.
இங்கனம்
முனைவர் இரா. வரதராசன்
No comments:
Post a Comment