Monday, January 30, 2017

எண்ணும் எழுத்தும் தமிழின் கண்கள் (2)



   மண்ணில் வாழும் உயிர்களுக்கு இரு
         கண்கள் கொடுத்தான் பேரிறைவன்.
   கண்கள் இரண்டு ஏனென்றேன் அவன்
         வள்ளுவனிடம் போய் கேளென்றான்.
   வின்னவர் ஆன வள்ளுவன் என்முன்
         குறளதிகாரம் நாற்பதைத் திறந்தான்.
   எண்ணும் எழுத்தும் இணைந்து வருவதை     
         கண்கள் இரண்டுடன் ஒப்பிட்டான்.

   எண் என்றால் வெறும் எண்ணல்ல
        எண்கள் படைக்கும் கணக்கென்றான்.           
   எண்ணிய நாழிகள் எட்டுக்கு ஒருகுறுணி,
        உழக்கில் பாதி ஆழாக்கு,
   பின்னர் அதிலும் பாதி மாகாணி
        என்பன தமிழில் கணக்காகி 
   இன்னும் காணி குண்டு குழியெனவே
        கணக்கிடும் அளவுகள் ஆயிரமே.        
  
   எழுத்தென்றால் வெறும் எழுத்தல்ல தமிழில்
          இலக்கணம் இலக்கியம் தானென்போம்.
     பழுத்தநற் புலவன் வள்ளுவன் இதையும்
          இலைமறை காயாய் சொன்னானே.
     எழுத்தறி வித்தவன் இறைவன் எனினும்  
        ஏட்டில் படைத்தவன் வள்ளுவன்தானே.
     மழுப்பல் வேண்டாம் எண்ணும் எழுத்தும்
         தமிழின் கண்கள் தானென்போம்.

No comments:

Post a Comment