Sunday, January 15, 2017

நூறாண்டு வாழ்கஎம் குலவிளக்கே



வாழ்க பல்லாண்டு வளமெல்லாம் பலபெற்று என்றேதான்
நாளெல்லாம் எமைவாழ்த்தி ஏற்றம்தான் நீர்கண்டீர் எம்மானே.
இன்றுநீர் அகவை எண்பதை முடித்து அன்றாடப் பணிகளை
நன்றே முடித்து குன்றில்மேல் ஒளிரும் குலவிளக்காய் திகழ்கின்றீர்.

இத்தருணம் நானும்மை வாழ்த்திட வயதெனக்குப் போதாது என்றேதான்
சித்தம் தெளிவுடன் சிரம்தாழ்த்தி நான்உங்கள் ஆசிகள் பெறவந்தேன்.
தத்துவம் பேசவில்லை தப்பேதும் கூறவில்லை தலைவணங்கி சொல்லிடுவேன்
நித்தமும் உம்சொல்லால் நானுயர்வேன் என்வாழ்வில் ஏற்றம் பலபெற்று.

குலவிளக்கே, நூறாண்டு நீர்வாழ்க நலமும் வளமும் பெற்று
நிலவாய் ஒளிர்ந்து எனைவாழ்த்தி ஆசிகள் வழங்கிட வேண்டுகிறேன்.    

No comments:

Post a Comment