Monday, January 30, 2017

எண்ணும் எழுத்தும் தமிழின் கண்கள் (3)



   எண்ணென்ப ஏனை எழுத்தென்ப இவ்விரண்டும்
           நம்மிரு கண்கள் ஆனாலும்
   கண்கள் இரண்டை படைத்த இறைவன்
              காரணம் சொல்ல மறந்தானே.
   எண்ணிப் பார்த்து இதன் பொருளும்
          யாதெனக் கேட்டேன் வள்ளுவனை.
   எண்ணும் எழுத்தும் இணைந்து நம்மிரு
         கண்கள் என்பது சரியென்றான்.

   ஏணிப் படிகள் எண்ணிடவே கஉவென
       எண்கள் உண்டு நம்தமிழில்.
   காணி குறுணி குழியுடன் நாழிகை 
       என்பன எல்லாம் தமிழ்மரபே.
   கோணிப் பையில் தானியம் அளக்க
      மரக்கால் படியும் தமிழ்அளவே.
   கேணியின் வட்டப் பரப்பு கணக்கிட
        சூத்திரம் உண்டு நம்தமிழில்.

   எழுத்தில் பிறந்தது தமிழென்றால் வெறும்
            வடிவம் மட்டும் பொருளல்ல.
   முழுக்க இணைந்து இலக்கண இலக்கியம்
            வளமது பெருகும் எழுத்தாலே.
   பழுத்த அனுபவம் பெறுவதற் கென்றே
            படைப்புகள் தமிழில் ஏராளம்.
   அழுத்தம் மிகுந்தே எண்ணும் எழுத்தும்
            தமிழின்இரு கண்கள் தானென்போம்.

No comments:

Post a Comment