Wednesday, November 23, 2011

மணமக்களே எழுவீர்

கணப்பொழுதில் கரைசேரா கடமைபல தானாற்றூம்
மணப்படகில் அமர்ந்தேநீர் மர்மங்கள் பலவாற்றி
இணக்கமுடன் வாழப்புகும் இன்மனங்கள் உடைத்தாகி
பிணக்கமின்றி பிறர்போலச் சிறந்தேநீர் வாழ்வீரே!

தமிழ்மண்ணில் தனிலுதித்து தனிச்சேவை செய்திடவும்,
கமழ்கின்ற மணம்மிக்க தமிழ்த்தேன் பருகிடவும்,
இகழ்கின்ற வீணர்களை அழித்தேநாம் ஓங்கிடவும்
புகழீனும் பெரும்பேற்றை எய்திடநீர் எழுவீரே!

=> இயற்றிய நாள்: 24.05.1964
(இக்கவிதை ஆவல்சூரன்பட்டி திரு.வெ. சீனிச்சாமி-விஜயா திருமணத்தின்போது வாசிக்கப்பட்ட வாழ்த்து மடல்)

No comments:

Post a Comment