மனத்திரையில் மாற்றமதை விளைவித்த மாமணியே!
எனக்கிருக்கும் ஓர்மனதைப் பண்படுத்திய நற்றிருவே!!
குணக்குன்றே! குறுநகையே!! கொந்தளிக்கும் பெருங்கடலே!!!
மனத்தகத்தே உதிக்கின்ற எண்ணமதைச் செப்பிடவா?
மாசறுநல் மடலதனை மனமாற நானேற்றேன்,
நேசமுடன் அதில்காணும் சொல்லனைத்தும் நல்லவையே;
பாசமது குறையாமல் பரிவோடு பேசினனே!
சூசகமாய் நேற்றாங்கோர் கேள்விக்கணை வீசியதேன்?
"என்மீது கோபமோ? எரிகின்ற தூபமோ?"
என்னுமொரு கேள்விக்கணை எனைநோக்கிப் பாய்ந்ததையே
பன்முறைதான் சிந்திதேன்; புண்பட்ட என்மனதில்
இன்னதுதான் பொருளென்று இன்னும்விடை பெற்றிலனே.
அஞ்சாதென் ஆருயிரே! அன்புளச் சகோதரியே!!
நெஞ்சாரைக் கூறிடுவேன் நேசமது குறையாது;
பிஞ்சாகிக் காயாகிக் கனியாது போனாலும்
எஞ்ஞான்றும் உளமதிலே ஒளிவீசி நிறை காண்போம்.
என்னகத்தே அன்றெழுந்த உணர்ச்சியின்று உள்ளடங்கி
என்னோடே இருக்கட்டும் என்றெண்ணி மறைத்தாலும்
கண்ணீரைத் தொட்டிதயம் கனிவோடு இம்மடலை
எணணாமல் எழுதுவது ஏனென்றே தெரியவில்லை.
"உயர்திரு அண்ணா"வென உற்றதொரு மடல்தொடங்க
அயர்ந்ததுவே என்னுடலம் அண்டமெலாம் இருள்சூழ;
புலம்பியது என்நாவும் பொங்கியது கண்ணீரும்;
இளந்தென்றல் சென்றேகப் புயலங்கே பிறந்ததுவே.
மடலதனைத் தொடருங்கால் மனம்விட்டுக் கதறியதை
உடனிருந்து யாரானும் என்நிலையைக் கண்டிருந்தால்
குடந்தாங்கிக் கண்ணீரால் நிறைத்திடுவர் நின்றாங்கே.
"அடமனமே! வருந்தற்க அதுவொன்றும் நடக்கவிலை"
என்றெனக்கு நானேநல் அமைதிதரும் சொல்பகன்றும்
நின்றதையே நினைந்தழுத நிலைகொள்ளா மனத்தோடு
நன்றதையே சிந்தித்து நான்கிதழின் மடலதனை
அன்புடனே ஏற்றேன்யான் அலைமோதும் மனதுடனே.
அன்றிரவு முற்றிலுமே துயிலில்லை துக்கமது
வந்தென் நெஞ்சடைக்க; அடுத்தநாள் முழுவதுமே
உண்டிடவோ மனமில்லை, உண்டதிலும் சுவையில்லை,
கண்டவர்தம் ஐயம்போக்கக் கரும்வேம்பாய் சிறிதுண்டேன்.
நிலவதன் ஒளியும்செந் நெருப்பாகப் பட்டதுவே,
மலரதன் மணம்கொல்லும் நெடியாகப் பட்டதுவே,
நலங்கெட்ட உளம்பெற்றே நானின்றும் அலைகின்றேன்,
குலமிட்ட திரைக்குப்பின் மதிகெட்டுத் தவிக்கின்றேன்.
பெண்ணுள்ளம் பேதமுறும் என்றஞ்சி முடிக்கின்றேன்.
இன்னும்பல வேதனைகள் என்னிடமே இருக்கட்டும்;
அன்போடு எனைக்காணும் போதெல்லாம் ஆனந்தக்
கண்ணீரைச் சொட்டுதலே எனக்களிக்கும் ஆறுதலாம்.
=>1964-'66 கல்லூரி நாட்களில் பல நண்பர்களுடன் பழகிய அனுபவத்தில் எழுதிய கற்பனைக் கவிதை.
எனக்கிருக்கும் ஓர்மனதைப் பண்படுத்திய நற்றிருவே!!
குணக்குன்றே! குறுநகையே!! கொந்தளிக்கும் பெருங்கடலே!!!
மனத்தகத்தே உதிக்கின்ற எண்ணமதைச் செப்பிடவா?
மாசறுநல் மடலதனை மனமாற நானேற்றேன்,
நேசமுடன் அதில்காணும் சொல்லனைத்தும் நல்லவையே;
பாசமது குறையாமல் பரிவோடு பேசினனே!
சூசகமாய் நேற்றாங்கோர் கேள்விக்கணை வீசியதேன்?
"என்மீது கோபமோ? எரிகின்ற தூபமோ?"
என்னுமொரு கேள்விக்கணை எனைநோக்கிப் பாய்ந்ததையே
பன்முறைதான் சிந்திதேன்; புண்பட்ட என்மனதில்
இன்னதுதான் பொருளென்று இன்னும்விடை பெற்றிலனே.
அஞ்சாதென் ஆருயிரே! அன்புளச் சகோதரியே!!
நெஞ்சாரைக் கூறிடுவேன் நேசமது குறையாது;
பிஞ்சாகிக் காயாகிக் கனியாது போனாலும்
எஞ்ஞான்றும் உளமதிலே ஒளிவீசி நிறை காண்போம்.
என்னகத்தே அன்றெழுந்த உணர்ச்சியின்று உள்ளடங்கி
என்னோடே இருக்கட்டும் என்றெண்ணி மறைத்தாலும்
கண்ணீரைத் தொட்டிதயம் கனிவோடு இம்மடலை
எணணாமல் எழுதுவது ஏனென்றே தெரியவில்லை.
"உயர்திரு அண்ணா"வென உற்றதொரு மடல்தொடங்க
அயர்ந்ததுவே என்னுடலம் அண்டமெலாம் இருள்சூழ;
புலம்பியது என்நாவும் பொங்கியது கண்ணீரும்;
இளந்தென்றல் சென்றேகப் புயலங்கே பிறந்ததுவே.
மடலதனைத் தொடருங்கால் மனம்விட்டுக் கதறியதை
உடனிருந்து யாரானும் என்நிலையைக் கண்டிருந்தால்
குடந்தாங்கிக் கண்ணீரால் நிறைத்திடுவர் நின்றாங்கே.
"அடமனமே! வருந்தற்க அதுவொன்றும் நடக்கவிலை"
என்றெனக்கு நானேநல் அமைதிதரும் சொல்பகன்றும்
நின்றதையே நினைந்தழுத நிலைகொள்ளா மனத்தோடு
நன்றதையே சிந்தித்து நான்கிதழின் மடலதனை
அன்புடனே ஏற்றேன்யான் அலைமோதும் மனதுடனே.
அன்றிரவு முற்றிலுமே துயிலில்லை துக்கமது
வந்தென் நெஞ்சடைக்க; அடுத்தநாள் முழுவதுமே
உண்டிடவோ மனமில்லை, உண்டதிலும் சுவையில்லை,
கண்டவர்தம் ஐயம்போக்கக் கரும்வேம்பாய் சிறிதுண்டேன்.
நிலவதன் ஒளியும்செந் நெருப்பாகப் பட்டதுவே,
மலரதன் மணம்கொல்லும் நெடியாகப் பட்டதுவே,
நலங்கெட்ட உளம்பெற்றே நானின்றும் அலைகின்றேன்,
குலமிட்ட திரைக்குப்பின் மதிகெட்டுத் தவிக்கின்றேன்.
பெண்ணுள்ளம் பேதமுறும் என்றஞ்சி முடிக்கின்றேன்.
இன்னும்பல வேதனைகள் என்னிடமே இருக்கட்டும்;
அன்போடு எனைக்காணும் போதெல்லாம் ஆனந்தக்
கண்ணீரைச் சொட்டுதலே எனக்களிக்கும் ஆறுதலாம்.
=>1964-'66 கல்லூரி நாட்களில் பல நண்பர்களுடன் பழகிய அனுபவத்தில் எழுதிய கற்பனைக் கவிதை.
No comments:
Post a Comment