நேற்றெனக்கு நீயளித்த இன்மனதின் நல்வாழ்த்து
ஊற்றெனத்தான் பாய்ந்ததுவே என்மனதில் இடையின்றி
தூற்றாது அதனைப் பெரும் துச்சமெனக் கருதாது
ஏற்றேன்யாந் இனிதுடனே என்கரங்கள் முன்னேந்தி.
வான்துளிக்கும் மாரிதனைச் செழிப்புடைய கானெனினும்
தானேற்கத் துளியேனும் தயங்காது அதுவன்ன
தேன்கலந்த அமிழ்தமெனத் தெவிட்டாத மனத்துடனே
யானளிக்கும் நன்றிசால் வாழ்த்துதனை ஏற்பாயோ?
எதிர்பாரா வாழ்த்துதனை எதிரேநீ அளித்ததற்கு
மறூவாழ்த்து தனையளிக்கச் சமயமின்றி தவித்தநான்
உடனளிக்க வியலாத தென்குறையோ?
=> இயற்றிய நாள்: 14.06.1964
( 1963-64 ம் ஆண்டு தேர்வில்/ I.B.Sc/ வெற்றி பெற்றதற்கு வாழ்த்தளித்த ஒருவருக்கு மறு வாழ்த்து)
No comments:
Post a Comment