Wednesday, November 23, 2011

இரங்கி இறங்காயோ?

மேகமே இந்நிலை மேவிட வேண்டிலன்
தாகமே என்னையுந் தவிக்கவும் செய்திடும்
சோகமே உருவான செயல்பல யானாற்ற,
நாகமே போன்றுநான் நடித்திட நேருமே.

ஆறுடன் யாவையும் அளவின்றிக் காய்ந்திட
ஏருட நுளாஉம்வே ளாளரு மோய்ந்திட
வீருட நுயிர்காக்கும் வீரரும் மாய்ந்திட
கூருட நுயிர்கேட்குங் கூற்றனும் விழையாங்கொல்.

வானத்தின் வெண்மனம் உறங்கிட நேரிடின்
கானத்தின் கதிர்பல கருகிட நேருமே;
மானத்தின் உயிர்பல மருண்டிட நேருமே;
தானத்தின் தன்மையுந் தரணியில் மாறுமே.

வன்கரம் உடையநல் லுலகினில் யாவரும்
தன்கரம் தனைக்காக்கு மென்பதை நன்கறிய,
உறங்கிய உளம்யாவும் உறுதிகொண் டோங்கிட,
இரங்கி இறங்காயோ இனியநல் மேகமே?

=> இயற்றிய நாள்: 30.11.1963

No comments:

Post a Comment