Saturday, November 26, 2011

பெண்களே ஏனிந்த பொறாமை

பெண்களே, கேளுங்கள் சற்றே - உங்கள்
கண்ணுக்கு அழகூட்ட கயல்விழி புருவத்திற்கு மையிடலாம்...
கன்னத்தில் பளிச்சிடும் ரோசாநிறப் பவுடரிடலாம்....
கருத்தமென் உதட்டிற்குப் பலவண்ணச் சாயமிடலாம்....
உச்சி வகிடெடுத்து உதிரம்போல் செந்தூரம் கொட்டிடலாம்....
நெற்றியின் நடுவிலே நாலுவகைப் பொட்டிடலாம்....
பின்னல் சடையோடு பொருந்தும் அயல்முடி சவுரி கட்டலாம்....
கோதிவிட்ட கூந்தல் அடக்க வலைபின்னல் கட்டலாம்....
அதிலும் ஒருகூடை மலர்தொடுத்த சரத்தைச் சுற்றலாம்....
காது மூக்கு இருபுறமும் மின்னும்கல் அணிகள் பூட்டலாம்....
கழுத்துநோக பவளமுத்து மாலைகள் தொங்கிடலாம்....
மார்பு நிமிர்த்தி மயக்கிடவோர் கச்சை கட்டலாம்....
அங்கமெலாம் தங்கமென வியக்க ஆபரணங்கள் தொங்கலாம்....
கைகளில் கலகலக்க கண்ணாடி வளையல்கள் மாட்டலாம்....
கைவிரல் கால்விரலில் கணையாழி மெட்டி கோக்கலாம்....
இறுதியாக வாரிய கூந்தலையும் அவிழ்த்து விடலாம்....
ஆனால் ஆண்கள் செய்த பாவமென்ன?
வெளுத்த தலைக்கும் வெண்தாடி மீசைக்கும்
கருப்புச் சாயமிட்டால் கரிச்சிக் கொட்டுவதேன்?
நீங்களும் அதைச்செய்ய மறக்கவில்லையே நியாயமா இது ?

=> 2004 :இன்றைய நாளில் பெரும்பாலான ஆண்களும் பெண்களும் நரைத்த தலை முடிக்கு மை போடுவது சாதாரணம் ஆகிவிட்டது. ஆனலும் மை போட்ட தலையுடன் உள்ள ஆண்களைப் பார்த்தால் 'இது தேவையா' என்பது போல் அவர்களது பார்வை காணமுடிகிறது. இதன் எதிரொளியே இந்தக் கவிதைக்கு பின்னணி.

No comments:

Post a Comment