செல்லக் குழந்தைகளே, செல்வக் குழந்தைகளே
பள்ளிப் படிப்பை பாதியில் விட்டதேனோ?
துள்ளித் திரிந்து தாவியோடி தவித்து விட்டதா? - இல்லை
துரத்தி விரட்டியோடி வேகம் ஓய்ந்து விட்டதா?
பள்ளி செல்ல மறந்ததா இன்று - இல்லை
பாடம் கற்க கசந்ததா? பள்ளிக்கு ஏன் போகவில்லை?
சொல்வீர் நீங்கள் செவி மடுப்போம் நாங்கள்.
அருமை குழந்தைகளே,
பொல்லாத காலமிது பொறுமை வேண்டும்
போக்கிரித் தனங்கள் நீங்கி வளர வேண்டும்.
யார்பெற்ற குழந்தையென ஊர்சொல்ல வேண்டும்.
நேர்மை வழியே நல்வழியென நீர்சொல்ல வேண்டும்.
பள்ளி படிப்பை பாதியில் நிறுத்த வேண்டாம் - பணம்
அள்ளிக் கொடுத்தாலும் எதிலும் பேராசை வேண்டாம்.
உண்மை பேசுங்கள் உத்தமராய் வாழுங்கள்.
பொய்மை வேண்டாம் பொறாமையும் வேண்டாம் - என்றும்
வாய்மையே வெல்லும் இது வல்லவன் வாக்கு.
கற்கப் போவது கைப்பிடி மண்ணளவு.
காலம் கடந்து விட்டால் அதுவும் கிட்டாது.
நன்கு படிக்க வேண்டும் நும்மாசானை மதிக்க வேண்டும்.
உன்குறை எதுவானாலும் உள்ளத்தே நோக வேண்டாம்.
உழைத்து பாருங்கள் உரியவை தானாய் கிட்டும்.
"நான்" முக்கியமா நாடு முக்கியமா உன் எண்ணமென்ன?
"நான்" தான் முக்கியமெனில் நாடுமிகத் தலை குனியும்.
அது சுயநலம் - வேண்டவே வேண்டாம்.
நாடு முக்கியமென தலை நிமிர்ந்து சொல்லுங்கள் - நாட்டின்
வளம் காப்போம் மிகுந்த வலிமை சேர்ப்போம்.
நாடு முன்னேறும் நாமும் முன்னேறுவோம்.
போதுமிந்த அறிவுரை பொறுமையோடு கேட்டதற்கு
நன்றி சொல்வேன் நன்கு சொல்வேன்.
நாவார வாழ்த்திடுவேன். வாழ்க நீவீர்.
வளர்க! வெல்க! நன்றி! வணக்கம்!
=> 2003: எல்லோருக்கும் கல்வி என்ற நிலையில் பள்ளி செல்லாத குழந்தைகளுக்காக எழுதப்பட்டது இக்கவிதை.
No comments:
Post a Comment