வந்ததுவே இக்கொடிய கோடையும்
வெந்ததுவே என்மெல்லிய பாதமும்
தின்றதுவே என்கால்களைச் செருப்பும்
நொந்ததுவே என்மனமும் மிகுந்தே.
இப்படிப்பட்ட கோடையின் கொடுமையை
யாரை அழைத்துக் கூறுவேன் யானும்?
ஐயோ இந்தக் கொடுமையை நானும்
அனுபவித் தேனோ ஆண்டினில் என்றும்?
இந்தக் கொடுமை நீடிக்குமானால்
இன்னல் படுவது நானே அன்றி
புவியில் வாழும் யாவரும் ஆதலால்
இரங்க வேண்டுமே இயற்கை அன்னையும்.
=> இயற்றிய நாள்: 25.05.1961.
No comments:
Post a Comment