Saturday, November 26, 2011

இன்றுமக்கு தீபஒளி ஏற்றும் நாள்

அழைப்புக்கு நன்றி! அருமை மாணவியரே,
உம்மையொரு கவிதை நடையில் வாழ்த்த வந்தேன் – இது
புதுக் கவிதை அன்றி புதுமைக் கவிதை அல்ல – இதில்
இலக்கணம் இல்லை எதுகை மோனை இல்லை.
வழக்கமான நடையில் சிறிது நயம் கூட்டி – கேட்போரை
மயக்கும் மாயச் சொற்கள் நிறைந்த எமாற்று வித்தை.

முதலாண்டு மாணவியரே, முதலில் உம்மை வரவேற்றேன்!
அருமை இளந் தென்றல்களே, இன்னிசைக் குயில்களே,
இன்றுமக்கு தீபஒளி ஏற்றும்நாள் – இந்தக்
கல்லூரிக்கு வரலாறு படைக்கும் நாள் -இதில்
புதிரேதும் போடவில்லை புரியும்படி நான் சொல்வேன்.

நடந்துவந்த பாதையோ கரடு முரடானது – ஆனாலும்
தொடர்ந்து வந்த சோதனைகள் சொற்பமே.
இடறி விழுந்தாலும் அதுவும் ஒரு நன்மைகுத்தான் – இவை
அனுபவம் கண்டோரின் அரிய சொற்கள்.

போட்டிகள் மிகுந்த சூழழில் நாம் ஏற்றமே என்றும் கண்டோம்
தோற்று விடுவோமா என்ற எண்ணம் என்றும் வந்ததில்லை.
ரவி என்றால் நிலா சங்கர் என்றால் சிவன் – இந்த
இரண்டும் இணைந்து செய்யும் சாதனைகள் ஏராளம். ஈ

சங்ககால வரலாற்றில் அன்று நாயன்மார்கள் அறுபத்தி மூவர் – ரவி
சங்கர்கால வரலாற்றில் இக்கல்லூரி தொடங்க இருபத்தி மூவர்.
இறுதித் தேர்வுவரை எங்களுக்குச் சோதனை – எனினும்
எழுதிய அனைவரும் தேர்ச்சி பெற்றது எங்கள் சாதனை.

பொறுமை காத்தோம் பொறாமை நீத்தோம் - எங்கள்
அருமை பெருமை ஊரறியும் அடக்கமாய் சொல்வேன்.
வாய்மை வென்றது இதில் வியப்பேதும் இல்லை- நல்ல
வரலாறு படைத்து விட்டோம் வரும் நாளில் வளம் காண்போம்.

முதல் தொடக்கம் நல்ல தொடக்கம் இன்று நல்ல முடிவு - இதில்
வித்தைகள் பல புரிந்தோம் வீணாகவில்லை எங்கள் முயற்சி.
”அத்தைமடி மெத்தையடி” இது கவிஞன் கண்ட கனவு – ஆனால்
“வெற்றிவழி எங்கள்வழி” இது எங்கள் கனவு.

சொன்னதைச் செய்வோம் செய்ததைத்தான் சொல்வோம் - வெறும்
திண்ணைப் பேச்சல்ல திடமான சொற்கள் இவை.
ஒரு சுற்று முடிந்து நான்காண்டு கடந்து விட்டோம்
மறு சுற்று தொடங்க ஒளியேற்றும் நாளிதுவே.

இருபத்தி மூன்றில் தொடங்கிய சேர்க்கை இடையில் நடனமாடி – இன்று
நாற்பதை நெருங்கி விட்டோம் நல்லதோர் வளர்ச்சி கண்டோம்.
பெருமை எமக்கென்றால் பேரானந்தம் உமக்கன்றோ!
அருமையான ஆசிரியப் பெருமக்கள் அரிய தலைமை இங்குண்டு.

இளைய மாணவிச் செவிலியரே – உங்கள் உடன்பிறவா
மூத்த சோதரிகள் உம்மை வருகவென்றும் வளம் பெறுகவென்றும்
இனிப்பு வழங்கி இன்முகம் தாங்கி முன் திங்களில்
களிப்புடன் இருகரம் கூட்டி வரவேற்கக் கண்டீர் –இன்று
உங்கள் வாழ்வில் ஒளிவீச, வளம் பெருக நீரிங்கு
மங்காத விளக்கேற்றி வீரநடை கண்டீர்.

FLORANCE NIGHTINGALE காட்டிய வழியில் இன்று
GLOWING LIGHT IN GALE ஒளிரட்டும் மிளிரட்டும்!
நல்லவை நாலும் நடக்கும் நும் வாழ்வில்
இனிவரும் நாள் உங்களுக்கே ஆனாலும் – வாழ்வில்
எளிமை வேண்டும், இனிய சொல் வேண்டும்,
உரிமையோடு சொன்னேன் உண்மையைச் சொன்னேன்.

எற்றம் காண்பீர்! எதிலும் வெல்வீர்!
என் வாழ்த்துக்கள் – இல்லை
எங்கள் இணைந்த வாழ்த்துக்கள். நன்றி! வணக்கம்!
(RASS ACADEMY NURSING கல்லூரியில் 26/03/2011 அன்று நடந்த LAMP LIGHTING விழாவில் வசித்தது)

No comments:

Post a Comment