Friday, November 25, 2011

ஜெ.ஆர்.சி துவக்கம் - தஞ்சை மாவட்டம் - வாழ்த்துரை

தஞ்சை மாவட்டம் - இது தரணிபுகழ் மாவட்டம்.
தரணி பாடிய பாட்டிலே தவழ்ந்ததின்று பாவாடை.
கல்யாணசுந்தரம் கவிபாட வெள்ளித்திரை வெற்றி கண்டது.
இம்மண்ணில் மிதித்தாலே பாமணக்கும் நாமணக்கும்
எண்ணச்சூழல்கள் என்றென்றும் எழில்காணும்.
இன்று கண்டோம் பள்ளிச் சிறுவர்க்கோர் செஞ்சிலுவைச் சங்கம்.
சிறப்புக் கருத்தாளர் இருவர் - இவர்களை
பாமணம் கமழும் மண்ணில்சிறு கவிதையால் வாழ்த்த ஆசை.

அவை வணக்கம். ஆவலாய் வீற்றிருக்கும் அனைவருக்கும் வணக்கம்.
வண்டார் குழலி வாய்மை பெற்றார் - அவர்தம் திறனைக் கண்டார் ஈங்கிலர்.
தமிழண்ணை அவர்தம் நாவில் தவழ்கிறதா
அல்லது மாயஜாலம் புரிகின்றதா?
தந்தை மணிவாசகம் பெற்ற செல்வி
அன்னார் அருள்வாக்கு நிறைந்த செல்வி.
பாரில் புகழொடு தோன்றுக - இது வள்ளுவர் வாக்கு;
வேரின் அடியோடு தோண்டுக - இது அம்மையார் நோக்கு.
இயற்கையோடு நாமிருந்தும் - உடல் இன்னலுறும் வேளையிலே
இருக்கும் இடத்தைவிட்டு இல்லாத இடம்தேடி
எங்கெங்கோ அலைகின்றோம் - எண்ணத்தில்
ஏதும் அறியார்தம் நிலைகொண்டோம்.
அம்மையார் திறமை என்னவென்பேன்!
சோதனைகள் பலசெய்து சாதனைகள் சிலகண்டார் - உடல்
வேதனைகள் நீக்க நல்லபல வழி சொன்னார்.
தான்கூறும் கருத்துக்களை நான்கேட்க ஏக்கம் கொண்டார்.
தன்னையும் அறியாமல் குழந்தை தாலாட்டும் பாடிவிட்டார்.
அவர் வருவாரா? வருகை தருவாரா? - இது தாலாட்டன்றோ!
வாழிய நின்புகழ்! வளர்கநின் தொண்டு.

மதுரைக்கொரு மீனாட்சி - தஞ்சை மண்ணுக்கொரு மாணிக்கவல்லி.
அவர்தம் புதல்வன் கிரேட் மவுன்டன்.
பரந்த அறிவு - பண்பட்ட ஆண்மீகம் - பார்வைக்கு எளிமை.
மலரிருக்கும் இடமெல்லாம் வண்டினம் தானாய்வரும் - அந்த
வண்டினம் மொய்க்கும் குழலி வண்டார்குழலி - இவருடன்
வம்பிழுக்க வந்துள்ளார் மாணிக்கவல்லி.
உடல்வளம் பெருக உள்ளத்தின் வலிமைகூட
தன்வழியும் கேளீர் என்றார்.

சோதனையும் வேண்டாம் சானையும் வேண்டாம் - உடல்
வேதனை நீக்க தன்வழி முயன்றுபார் என்றார்.
மூலிகை வேண்டாம் - தினம்அரை நாழிகை போதுமென்றார்.
மனதை அடக்கு என்றார் மகிழ்ச்சி பொங்குமென்றார்.
உடலை வணக்கு என்றார் உள்ளம் துள்ளுமென்றார்.
வேதத்தின் சுடரொளி கீதை - பைபிள் - குர்ஆன்
யோகத்தின் சுடரொளி திரேக யோகம்.
யோகம் செய்தால் உடலும் வலிமை பெறும் என்றார்.
மூலிகையே வேண்டாமென்றார்.

இவ்விரு மருத்துவரை மேடையேற்றினோம்
அவர்தம் செயல்விளக்கம் கண்டோம் - தெளிவடைந்தோம்.
கல்வியா - செல்வமா - வீரமா - இது அன்றைய வாதம்.
மூலிகையா - யோகமா - இது இன்றைய வாதம்.
முடிவெடுப்பது உங்கள் கையில் - முன்மொழிவேன்.
நான்ரெடி. நீங்கள் ரெடியா?

=> (29.11.2001) தஞ்சாவூர் மாவட்டத் தொடக்கக் கல்வி அலுவலராகப் பணியாற்றியபோது கும்பகோணம் வள்ளலார் மேல்நிலைப் பள்ளியில் நடந்த ஜெ.ஆர்.சி தொடக்க விழாவில் வாசித்தது.

No comments:

Post a Comment