Tuesday, November 22, 2011

போய் வருவோம் விடைதாரீர்



அனுபவத்தில் முதிற்சிபெற்ற ஆசிரியப் பெருந்தகையீர்!
அணுவணுவாய் மாணவர்தம் மனக்கருத்தை உணர்ந்தறிந்து
தினம்தினம்நற் பயிற்சிபெற திரண்டுவந்த நால்வருமே
மனந்திறந்து உமக்களிக்கும் மாசறுநல் மடலிதுவே!

நேற்றுவரை உடனிருந்து உளங்குளிர பகன்ற சொற்கள்
ஊற்றெனத்தான் பாய்ந்தனவே எம்மனதில் இடையின்றி.
தூற்றாது அதனைப்பெருந் துச்சமெனக் கருதாது
ஏற்றோம்யாம் இனிதுடனே எண்கரங்கள் முன்னேந்தி.

வான்றுளிக்கும் மாரிதனைச் செழிப்புடைய கானெனினும்
தானேற்கத் துளியேனும் தயங்காது அதுவன்ன,
தேன்கலந்த அமிழ்தமெனத் தெவிட்டாத தமிழினிலே
யாமளிக்கும் நன்றிசால் வணக்கம்பல ஏற்பீரே.

பிரிந்திடவோ மனமில்லை; பிரியோம்நாம் என்றாலும்
இருந்திடவும் இடமில்லை எவரிடம்போய் என்சொல்வோம்?
விருந்தொன்று நமைப்பிரித்து வேறெங்கும் விரட்டிடினும்
இருந்திடுவோம் ஒருங்கிணைந்து உளமதிலே ஒளிவீசி.

அன்றுமுதல் இன்றுவரை அறிந்துமறி யாமலுமே
ஒன்றிரண்டு சொற்குற்றம் சொல்லடுத்த செயற்குற்றம்
என்றேதும் கண்டிருப்பின் எண்ணமதில் கொள்ளாமல்
இன்றேநீர் பொருத்தருள்வீர் போய்வருவோம் விடதாரீர்.

=> 23.11.'67
அன்று மதுரை அமெரிக்கன் கல்லூரி உயர்நிலைப் பள்ளியில் நடந்த ஆசிரியர் பயிற்சித் திட்டத்தின் நிறைவு நாள் விழாவில் வாசிக்கப்பட்ட து.

No comments:

Post a Comment