நன்றி மறப்பது நன்றன்று என்று
அன்றே சொல்லி வைத்தார் ஒருவர்.
சொன்னவர் என்றோ சென்று விட்டார்
பின்னவர் அதன்வழி செயல்படும் அழகிதுவே.
இதுவென்ன புதிரென எண்ண வேண்டாம்
இயல்பாய் எடுத்துரைப்பேன் கேளீர – ஆம்
நான்காம் ஆண்டு மாணவச் செவிலியர்
பாங்குடன் நேற்று பிரியா விடை பெற்றீர்.
பிரிந்து செல்வது பேரிழப்பு, பெரும் துயர் என்றுணர்ந்து
நெறிதவழாது நன்றி சொல்ல நிறைமனதாய் கூடினரின்று.
சென்று வாருங்கள் செயல்பலவென்று வாருங்கள் என
தென்றலின் இயலிசை நாடகமாய் வடிவமைத்து – இளையோர்
பொங்கும் புதனன்று பொழிந்து விட்ட அழகே அழகு.
இளைய சோதரிகள் எண்ணங்கள் பல சேர்த்து
கலையம்சம் கூட்டி கற்பனைத் தேரோட்டி
அலையலையாய் நிகழ்ச்சிகள் பல சேர்த்து
மழையாய்க் கொட்டிய மழழைப் படைப்புகள் அற்புதம்.
இது தொடர வேண்டும் இனியும் வளர வேண்டும்.
கிடைத்ததை சுருட்டிக் கொண்டு செல்லாமல்
படைப்பில் நாங்களும் சளைத்தவர் அல்லவென – விருந்து
படைத்து உண்டு மகிழச் செய்தீர் – கலைப்
படைப்புகள் பல சேர்த்து பரவசம் மேலிட
மனம் குளிரச் செய்தீர் மட்டிலா மகிழ்ச்சிதான்.
உங்களைப் பற்றி ஓரிரு வரிகள் சொல்ல விருப்பம் எனக்கு – ஆனால்
சங்கடப் படும் வகையில் எதுவும் சொல்ல மாட்டேன் பயம் வேண்டாம்.
தொடக்கத்தில் 23 பேர் – ஆனால்
அதில் இருவர் இன்றில்லை அனைவரும் அறிவீர்.
செல்வி பிரத்திமா நீரென்ன குறை கண்டீரோ
பிரிந்து செல்வேனென வேறு கல்லூரி நாடிச் சென்றீர்.
பிரிந்து சென்ற இழப்பு எமக்கல்ல உமக்குதான் உறுதியாய் சொல்வேன்.
ஓவியச் செல்வியே, நீ ஓவியமாய் இருந்தது சரிதான் – ஆனாலும்
இடையில் காவியமாய் மாறிவிட்ட காரணம்தான் என்னவோ!
ஆவியாக எங்கோ பறந்து திரிந்தாலும்
மேவியதோர் எண்ணங்களில் இன்றுனையும் அழைக்கின்றேன்.
உன் தோழியரை வாழ்த்திட ஒருகணம் வருவாயா?
வாழ்த்திட வயதில்லை உனக்கு என்றாலும்
வாழ்ந்து முடித்த அமரர் நிலையில் உனைக் கண்டேன்.
உன் உடன் தோழிகள் அளிக்கும் விருந்தில்
நீயும் கலந்து கற்பனையாய் வாழ்த்தி
தொடர்வாய் உன் நீண்ட மாயப் பயணத்தை.
ஆஹா! மாணவச் செல்வங்களை சற்று மறந்து
எங்கோ செல்கின்றேன் பொறுங்கள்
இதோ உங்களுக்கு சிலவரிகள் தருகின்றேன்.
இருபத்தொன்று என்பது எண்ணியல் சோதிடத்தில் உயர்ந்த எண்.
அதன் பலன் அனைவருக்கும் கிட்டட்டும்.
கடந்த நாட்களை திரும்பிப் பார்க்கிறேன்.
உங்கள் குழுவில் எல்லா அம்சங்களும் ஏராளம் – வகுப்பில்
குறும்பு செய்ய இருவர் குட்டி தூக்கம் போட இருவர்,
கருத்தோடு பாடம் கேட்க இருவர் நறுக்கென சிரிப்பூட்ட இருவர்,
எதையோ எண்ணி ஏங்கித் தவிக்க இருவர்
இதையும் படிக்க வெண்டுமாவென மனதளவில் திட்ட இருவர்,
அவள் வருவாளா என்ற பாடலுக்கு இணையாக
இவர் எப்போது வகுப்பை விட்டு போவாரோ என்று
எதிர் பாட்டு பாட இருவர்.
கருமமே கண்ணென கருத்தில் ஆழ்ந்திட இருவர்
பரிதாபமாய் காணும் இருவர் பக்கத்தில் இருப்பவரை சீண்டி விடும் இருவர் – ஆனால் பாடத்தில் கவனம் செலுத்த மட்டும் ஒருவர் – இப்படி
பலர் இருக்கக் கண்டேன் – ஆனாலும்
நல்ல உள்ளங்கள்! நமக்கெதற்கு வம்பென
தன் செயலோடு தாணுண்டு என்றவழி செல்பவர் நீவீர்.
வாழ்க வளமுடன்!
எண்ணம்போல் எல்லாம் கிட்டும் உமக்கு.
நன்றி! வணக்கம்!
=> (RASS ACADEMY NURSING கல்லூரியில் 24/02/2011-ல் 4.ம் ஆண்டு மாணவிகள் நன்றி கூறும் விழாவில் வாசித்தது)
அன்றே சொல்லி வைத்தார் ஒருவர்.
சொன்னவர் என்றோ சென்று விட்டார்
பின்னவர் அதன்வழி செயல்படும் அழகிதுவே.
இதுவென்ன புதிரென எண்ண வேண்டாம்
இயல்பாய் எடுத்துரைப்பேன் கேளீர – ஆம்
நான்காம் ஆண்டு மாணவச் செவிலியர்
பாங்குடன் நேற்று பிரியா விடை பெற்றீர்.
பிரிந்து செல்வது பேரிழப்பு, பெரும் துயர் என்றுணர்ந்து
நெறிதவழாது நன்றி சொல்ல நிறைமனதாய் கூடினரின்று.
சென்று வாருங்கள் செயல்பலவென்று வாருங்கள் என
தென்றலின் இயலிசை நாடகமாய் வடிவமைத்து – இளையோர்
பொங்கும் புதனன்று பொழிந்து விட்ட அழகே அழகு.
இளைய சோதரிகள் எண்ணங்கள் பல சேர்த்து
கலையம்சம் கூட்டி கற்பனைத் தேரோட்டி
அலையலையாய் நிகழ்ச்சிகள் பல சேர்த்து
மழையாய்க் கொட்டிய மழழைப் படைப்புகள் அற்புதம்.
இது தொடர வேண்டும் இனியும் வளர வேண்டும்.
கிடைத்ததை சுருட்டிக் கொண்டு செல்லாமல்
படைப்பில் நாங்களும் சளைத்தவர் அல்லவென – விருந்து
படைத்து உண்டு மகிழச் செய்தீர் – கலைப்
படைப்புகள் பல சேர்த்து பரவசம் மேலிட
மனம் குளிரச் செய்தீர் மட்டிலா மகிழ்ச்சிதான்.
உங்களைப் பற்றி ஓரிரு வரிகள் சொல்ல விருப்பம் எனக்கு – ஆனால்
சங்கடப் படும் வகையில் எதுவும் சொல்ல மாட்டேன் பயம் வேண்டாம்.
தொடக்கத்தில் 23 பேர் – ஆனால்
அதில் இருவர் இன்றில்லை அனைவரும் அறிவீர்.
செல்வி பிரத்திமா நீரென்ன குறை கண்டீரோ
பிரிந்து செல்வேனென வேறு கல்லூரி நாடிச் சென்றீர்.
பிரிந்து சென்ற இழப்பு எமக்கல்ல உமக்குதான் உறுதியாய் சொல்வேன்.
ஓவியச் செல்வியே, நீ ஓவியமாய் இருந்தது சரிதான் – ஆனாலும்
இடையில் காவியமாய் மாறிவிட்ட காரணம்தான் என்னவோ!
ஆவியாக எங்கோ பறந்து திரிந்தாலும்
மேவியதோர் எண்ணங்களில் இன்றுனையும் அழைக்கின்றேன்.
உன் தோழியரை வாழ்த்திட ஒருகணம் வருவாயா?
வாழ்த்திட வயதில்லை உனக்கு என்றாலும்
வாழ்ந்து முடித்த அமரர் நிலையில் உனைக் கண்டேன்.
உன் உடன் தோழிகள் அளிக்கும் விருந்தில்
நீயும் கலந்து கற்பனையாய் வாழ்த்தி
தொடர்வாய் உன் நீண்ட மாயப் பயணத்தை.
ஆஹா! மாணவச் செல்வங்களை சற்று மறந்து
எங்கோ செல்கின்றேன் பொறுங்கள்
இதோ உங்களுக்கு சிலவரிகள் தருகின்றேன்.
இருபத்தொன்று என்பது எண்ணியல் சோதிடத்தில் உயர்ந்த எண்.
அதன் பலன் அனைவருக்கும் கிட்டட்டும்.
கடந்த நாட்களை திரும்பிப் பார்க்கிறேன்.
உங்கள் குழுவில் எல்லா அம்சங்களும் ஏராளம் – வகுப்பில்
குறும்பு செய்ய இருவர் குட்டி தூக்கம் போட இருவர்,
கருத்தோடு பாடம் கேட்க இருவர் நறுக்கென சிரிப்பூட்ட இருவர்,
எதையோ எண்ணி ஏங்கித் தவிக்க இருவர்
இதையும் படிக்க வெண்டுமாவென மனதளவில் திட்ட இருவர்,
அவள் வருவாளா என்ற பாடலுக்கு இணையாக
இவர் எப்போது வகுப்பை விட்டு போவாரோ என்று
எதிர் பாட்டு பாட இருவர்.
கருமமே கண்ணென கருத்தில் ஆழ்ந்திட இருவர்
பரிதாபமாய் காணும் இருவர் பக்கத்தில் இருப்பவரை சீண்டி விடும் இருவர் – ஆனால் பாடத்தில் கவனம் செலுத்த மட்டும் ஒருவர் – இப்படி
பலர் இருக்கக் கண்டேன் – ஆனாலும்
நல்ல உள்ளங்கள்! நமக்கெதற்கு வம்பென
தன் செயலோடு தாணுண்டு என்றவழி செல்பவர் நீவீர்.
வாழ்க வளமுடன்!
எண்ணம்போல் எல்லாம் கிட்டும் உமக்கு.
நன்றி! வணக்கம்!
=> (RASS ACADEMY NURSING கல்லூரியில் 24/02/2011-ல் 4.ம் ஆண்டு மாணவிகள் நன்றி கூறும் விழாவில் வாசித்தது)
No comments:
Post a Comment