Saturday, November 26, 2011

புரட்சிப் பெண்ணே பயம் வேண்டாம்

புரட்சிப் பெண்ணே, புதுமைப் பெண்ணே,
ஒன்று இரண்டல்ல
மூன்று நான்குபேர் ஏசினாலும்
அஞ்சும் நிலைவேண்டம் ஆறுதலடைக - அங்குள்ள
ஏழும் எட்டுமாவென எண்ண வேண்டாம்.
நவநாகரீக உலகில் உன்திறமை பத்தும் செய்யும்.
பயம்நீக்கி செயல்படுக புரட்சிப் பெண்ணே.

=> 2005: பொதுவாக இன்றைய நாளில் உயிருக்கும் உடமைக்கும் பாதுகாப்பு இல்லை.
ஆனாலும் பெண்கள் நினைத்தால் எதையும் சாதிக்க முடியும் - அச்சம் வேண்டியதில்லை என்ற கருத்தில் எழுந்தது இக்கவிதை.

No comments:

Post a Comment