புகழ்வது எளிது; பெற்ற புகழினை மறைப்பது கடினம்;
இகழ்வதும் எளிது; இல்லாததை உண்டென்பதும் கடினம்.
இஃதென்ன புதிரென்று புலம்பும் குரலெங்கோ தவழ்ந்துவர
குரல்வரும் திசை நோக்கி நானிக் குனிகின்றேன்.
குற்றமேதும் கண்டனரோ, தலையில் குட்டிடவும் எண்ணினரோ!
சற்றே தயங்கி நின்றேன் சரிந்த மனதைப் புரிந்து கொண்டேன்.
அருமை மாணவியரே, வருங்காலச் செவிலியரே,
பெருமை பலவுண்டு நீவீர் பயிலும் இக்கல்வி நிறுவனத்தில்.
வெறும்புகழ் பாடவில்லை வெண்பாவும் தீட்டவில்லை.
அரும்பாடு பட்டதால் நம் நிறுவனத்தின் மேலாளர்,
நித்தமொரு திட்டம் தீட்டி நிறைவு கூட்டும் தாளாளர்,
பரிவு, பாசம், பண்பில் குறைவில்லா முதல்வர், துணைமுதல்வர்,
பாடம் பயிற்றிட தகுதியுள்ள விரிவுரையாளர் பலரோடு
குறையேதும் இல்லாது குன்றத்தின் ஒளிவிளக்காய் – உம்மை
வழிநடத்திப் பெருமை காணும் பணியாளர் இங்குண்டு.
இயற்கைச் சூழல்; எழில்கொஞ்சும் மரநிழல்கள்,
அருகிலே உணவு விடுதி, அன்பான காப்பாளர்,
படித்ததைச் செயல்வழிகாண தனித்தனி ஆய்வகங்கள்,
பிடித்ததைப் புரட்டிப்பார்க்க பலநூல்கொண்ட நூலகம்,
திறமைகள் பலகாட்ட பல்வகைப் போட்டிகள்,
போட்டிக்கு பலபரிசுகள்; தாய்தந்தை நேர்காணல்,
இன்னும் ஏராளம் இங்குண்டு எண்ணிப் பாருங்கள்.
தூரத்துப் பச்சை கண்ணுக்கினிமை மறந்துவிடுங்கள்.
சேரநினைத்துச் சேர்ந்த இடம் சிறந்த இடமே.
பெருமை கொள்வீர் வெறும் புகழ்ச்சி இல்லை.
Rass செவிலியர் கல்லூரி என்றும் ராசியான கல்லூரியே.
(RASS ACADEMY NURSING கல்லூரியின் ஜனவரி-2011 QUARTERLY MAGAZINE – ல் வெளியிடப்பட்டது)
No comments:
Post a Comment