Friday, November 25, 2011

ஜெ.ஆர்.சி துவக்கம் - தஞ்சை ஊரகம் - வாழ்த்துரை

செஞ்சிலுவைச் சங்கமது அனைவருக்கும் சொந்தம் - ஆனாலும்
தஞ்சை நகரில் மட்டுமே சுடர்விடக் கண்டேன் - அதனொளி
சிறிது ஊரகத்தில் கண்டேன் எட்டிப்போக ஏதுவில்லை.
பள்ளிகளில் ஒருங்கிணைப்புப் பணியேற்று
நகரளவில் சுடர்கண்ட சுடர்மணி யாரென்றேன் - அது
நம்மிலொரு சோதரி ராணியென்றார்.

நகராட்சிப் பள்ளியிலே நற்பணி ஆற்றிவரும்
நிகரற்ற இப்பணிக்கு என்னினிய வாழ்த்துக்கள்.
சுறுசுறுப்பு, சாதுர்யம் இவ்விரண்டோடு
தன்னம்பிக்கை மற்றும் தன்னார்வத் தொண்டுள்ளம்
இவைகொண்ட ராணியை வண்டார் குழலியார்
ஏணி என்றார் தோனி என்றார்.

நானொன்றும் கூறுவேன் நயமாக.
உமது தொண்டென்றும் ஊறும் கேணியாகவும்
இருக்கட்டும் எனக்கூறி வாழ்த்துகிறேன்.
வாழ்க வளமுடன்!
வளர்க நின் தொண்டு!

=> (2001 -'03) தஞ்சாவூர் மாவட்டத் தொடக்கக் கல்வி அலுவலராகப் பணியாற்றியபோது தஞ்சை நகர நடுநிலைப் பள்ளிகளில் ஜெ.ஆர்.சி தொடக்க விழாவில் வாசித்தது.

No comments:

Post a Comment